ஆர்.எஸ்.எஸ். - சேவா பாரதி அமைப்பானது, அனைத்துத் துறை மக்களுக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சேவைப் பணிகள் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பு.


அத்தி வரதர் உற்சத்தின் நிறைவு சேவையாக 18.8.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைப் பணி (ஸ்வச் பாரத்) செய்யப்பட்டது. இந்த சேவைப் பணியில் ஆர்.எஸ்.எஸ். காஞ்சி கோட்ட தலைவர் திரு. இராமா. ஏழுமலை தலைமையேற்க, ஆர்.எஸ்.எஸ். காஞ்சி நகரத் தலைவர் டாக்டர் அரவிந்தன் வரவேற்பு மற்றும் அறிமுகவுரையாற்ற, இந்த சேவைப் பணியை மன்னார்குடி ஜீயர் பூஜ்ய செண்டலங்கார ஜீயர், மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. கண்ணன், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென் பாரத சேவைப் பிரிவு அமைப்பாளர் திரு. பத்மகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் மற்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் திரு. பக்தன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். நிறைவாக ஆர்.எஸ்.எஸ். காஞ்சி மாவட்டத் தலைவர் இரா. கோதண்டம் மகிழ்ச்சியுறையாற்றினார்.


தினசரி மொத்தம்
குடிதண்ணீர் - 15,000 லிட்டர் 7,50,000
பானகம் - 7,000 லிட்டர் 3,50,000
மோர் - 3,000 லிட்டர் 1,50,000
அன்னதானம் - 12,000 நபர்கள் 6,00,000
வீல் சேர் - 300 பக்தர்கள் (50 பேர்) 15,000
சுத்தம் சுகாதாரம் - 40 நபர்கள்
(5 மணி நேரம்) 2,000
பக்தர்களை முறைப்படுத்துதல் - 40 2,000
துளசி பிரசாதம் - 50 கிலோ 2,500
மஞ்சள் பிரசாதம் - 15 கிலோ 750
தீர்த்தப் பிரசாதம் - 10,000 பக்தர்களுக்கு 5,00,000
தகவல் மையம் - 10 நபர்கள் 500
பிரபந்தக் - 250 மனித சக்தி 12,500
திருமண் இடுதல் - 1,000 50,000
0 Comments