விஜயதசமி திருநாளை முன்னிட்டு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் வேலூர் விபாக் சேவகர்களுக்கான சீருடை அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அக்டோபர் 13-2019 ஞாயிறு அன்று ஆம்பு+ரில் நடைபெற்றது. ஆர். எஸ். எஸ்- ன் 94 ஆவது ஆண்டு விழா, மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜெயந்தி விழா, ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100ஆவது நினைவு ஆண்டு, நேதாஜியின் சுதந்திர இந்திய பிரகடனத்தின் 75 ஆவது வெற்றி ஆண்டு, குருநானக் 550 ஆவது ஆண்டு ஆகியவைகளை மையப்படுத்தி ஐம்பெரும் விழாவாக சமுதாய நல்லிணக்க சீருடை அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
பொதுக்கூட்டத்தின் துவக்கத்தில் சுவாமினி சுத்த வித்யானந்த ஸரஸ்வதி
நிறைவாக ஆர்.எஸ்.எஸ் மாநில மக்கள் தொடர்பு அமைப்பாளர் திரு.இராம இராஜசேகர் அவர்கள் தனது சிறப்புரையில் 94 ஆண்டுகளாக தொடர்ந்து நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்றும் இதில் ஒரு விசித்திரம் என்ன வென்றால் உறுப்பினர் சேர்க்கை கிடையாது தேசபக்தி, தொண்டு, சேவை, இவைகளையே குறிக்கோளாகக் கொண்டு கட்டுப்பாடுடன் செயல்படும் அமைதியான இயக்கம் என்று குறிப்பிட்டார். சுனாமி பாதிப்புக்குள்ளான போது உடனடியாக ஓடோடி சென்று பிணங்களை அகற்றி சேவை செய்தது மட்டுமல்லாது வீடிழந்த அவர்களுக்கு 2450 வீடுகள் கட்டித்தந்தது ஆர்.எஸ்.எஸ் மேலும் சென்னை வெள்ளத்தின் போது 4500 ஸ்வயம் சேவகர்கள் நீந்தியும், தலையில் சுமந்தும் சென்று உணவு வழங்கியதை குறிப்பிட்டார் நிறைவாக ஆர்.எஸ்.எஸ் யாருக்கும் எதிரான இயக்கமல்ல கிருத்துவ முஸ்லீம்கள் கூட எங்களுடன் இனைந்து பாரத நாட்டின் உயர்வுக்காக பாடுபடலாம் என்றும் தேசத்துக்கு தீங்கு செய்தால் அவர்கள் இந்துவானாலும் வேறு எந்த மதத்தவராளும் ஆர்.எஸ்.எஸ் கண்டிக்கும் என்று தனது சிறப்புறையை நிறைவு செய்தார். சங்க பிரார்தனையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.
0 Comments