பிஹார்
தேசம் தந்த தெம்பு
பிஹார் மாநிலம் பாகல்பூர் நகரில் ராஜநந்தினி தேவி ஏப்ரல் 6 அன்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலம் என்று வழக்கமாக கூறுவது போல கூற முடியவில்லை. குறைமாதப் பிரசவம். பிறந்த குழந்தைக்கு பல உடல் நல பாதிப்புகள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது. தேவியின் தந்தை துயரம் தாங்காமல் “என் குடும்பத்தில் இன்னொரு நபரையும் பறி கொடுக்க வேண்டுமா?” என்று கதறினார். குழந்தையின் தாய்க்கு நம்பிக்கை இருக்கிறது. “என் கணவர் ஆறு மாதங்களுக்கு முன் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டபோது தேசமே எங்களுக்கு ஆறுதல் கூறியது. எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொண்டது. அதுபோல் இப்போதும் இந்தக் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்கிறார். ஆம், இவர் புல்வாமாவில் படுகொலை செய்யப்பட்ட அந்த 44 சி.ஆர்.பி.எப் வீரர்களில் ஒருவரான ரத்தன் டாகுரின் மனைவி. மறுபடியும் எதிரி நம் ஜவான்களைப் படுகொலை செய்யத் துணியாதபடி அவனுக்கு படுபயங்கர தண்டனை கொடுக்க வேண்டும் என்று அப்போது இந்தக் குடும்பம் கோரியது.
உத்தராகண்ட்
கல்வி நிலையத்தில் ஒரு கொல்லும் கும்பல்!

ஜம்மு காஷ்மீர்
உயிரைக் கொடுத்தாவது
ஊரைக் காப்பது என்பது...
ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் என்ற பகுதியில் ஜிகாதிகள் நடமாட்டம் அதிகம். விழிப்புள்ள ஹிந்துக்கள் அந்தப் பகுதியில் வன்முறை சக்திகளை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். அதன் ஈட்டி முனையாக செயல்பட்டவர் மெடிகல் ஷாப் வைத்திருக்கும் சந்திரகாந்த். அண்மையில் இந்த தேசபக்தரை தேசதுரோகிகள் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். சந்திரகாந்த் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொண்டுப்பணிகளை ஒருங்கிணைத்து வந்தவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கொலையாளிகளை விரைவாக கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று மாநில அரசைக் கோரியுள்ளார். மாநில அரசு அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும் உணர்ச்சிப் பிழம்பாக ௧௫,௦௦௦ பேர் சந்திரகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் ரூபேஷ் குமார், மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, மாநில சட்டமன்ற சபாநாயகர் நிர்மல் சிங் உள்ளிட்டோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
பஞ்சாப்
பலிதானிகளை மறக்கலாமா?

0 Comments