Counselling to flood victims by RSS-Sevabharathi volunteers

RSS-Sevabharathi volunteers today visited Pulianthope, Pattalam, Choolai areas and rendered counselling by a team of 40 women to nearly 1000 flood victims.  The flood victims felt happy and relieved and thanked RSS for their silent service.  

மன அழுத்தம் தீர்த்த ஆர்.எஸ்.எஸ்.- சேவாபாரதி  

சென்னையின் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்-சேவாபரதி அமைப்பினர் தேவையான அனைத்து விதமான-நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.சேவா பாரதியின் 40பேர் கொண்ட பெண்கள் குழு பாதிககப்பட்ட பகுதிகளில் மக்களைநேரடியாகச் சந்தித்து அவர்களது உளவயல் ரீதியான பிரச்சனைகளைகவுன்சிலிங் மூலம் தீர்க்க உதவுகின்றனர். இந்த மகளிர்குழுவினர்பேரிடர் பாதித்த பகுதிகளில் மக்களின் மனநிலையை ஆராய்ந்துஅதற்கேற்ப ஆலோசனைகள் வழங்குவதில் சிறப்புப் பயிற்சிபெற்றவர்கள் ஆவர்.          

அந்த விதத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற அந்த பெண்கள் குழுவினர்இன்று காலை புளியந்தோப்பு, ..சி.நகர், திரு.வி. தெரு, பட்டாளம்,ஆகிய பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கினர்.  நேற்றும் இன்றும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்தனர்.  பெண்களுடன் கலந்து பேசியதுமட்டுமல்லாமல் அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாடி அவர்கள் சகஜ நிலைக்கு வர  உதவினர்.       

 
உணவு, உடை, பொருட்கள் என பல்வேறு விதமான உதவிகள் செய்தசேவாபாரதி அமைப்பினர் அதோடு நிறுத்தி விடாமல் தொடர்ந்து தங்கள்  வீடு தேடி வந்து ஆறுதலாகப் பேசியது மன நிறைவைத்தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  மழையினால் ஏற்பட்ட மனஅழுத்தம் நீங்க இந்த பெண்கள் குழுவினர் பெருமளவு உதவியாகவும்அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 






Post a Comment

0 Comments