மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் விடுக்கும் சவால்



ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் விடுக்கும் சவால்:
கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்காக மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தேவையான பலனைத் தந்துள்ளது. 2011 மத வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை ஆய்வு செய்தால் இந்த மக்கள் தொகை கட்டுபாட்டுக் கொள்கையையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்நிய ஊடுருவல், மத மாற்றம் போன்ற பல காரணங்கள் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளுக்கு மற்றொரு காரணமாகும். அந்நிய ஊடுருவலால், மத மாற்றத்தால் நாட்டின் எல்லைப் பகுதிகளில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும், கலாசார அடையாளத்திற்கும் ஊரு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.
1951-2011 ஆண்டுகளுக்கு இடையில் நமது  நாட்டில் தோன்றிய மதங்களைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 88 விழுக்காட்டிலிருந்து 83.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 9.8 விழுக்காடாக இருந்த இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 14.23 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கம் அசாம், பீகார் மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களில் மிக அதிகமாக இருப்பதற்கு அண்டைநாடான பங்களாதேஷிலிருந்து  அதிகரித்து வரும் ஊடுருவலே காரணம் என்று அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது விஷயமாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட  உபமன்யு ஹசாரிகா கமிஷன், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள பல தெளிவான தீர்ப்புகள், அவ்வப்போது பல்வேறு நீதிமன்றங்களில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள் இதற்கு தக்க ஆதாரங்களாகும். 
தொடர்ந்து அண்டைநாட்டில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவல் செய்பவர்களால் அம்மாநில மக்களின் உரிமைகள் பறிபோகின்றன. அரிதாக உள்ள இயற்க்கை வளங்கள் ஊடுருவல்காரர்களால் மேலும் மேலும் சுரண்டப் பட்டு வருகின்றன. இதனால் அங்கு வசித்து வருகின்ற மக்களுக்கும் ஊடுருவல் செய்து குடியேறி உள்ள மக்களுக்கும் இடையில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவல் காரணமாக மத ரீதியான சமநிலை இல்லாமல் போவதுடன் அங்கு தீவிரவாதம் ஏற்பட வழிவகுத்துள்ளது. 1951 ஆம் ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய மதங்களைப் பின்பற்றியவர்களின் எண்ணிக்கை 99.2 விழுக்காடா இருந்தது. ஆனால் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி அது 81.3 விழுக்காடாகக் குறைந்து, 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் மேலும் குறைந்து அது 67 விழுக்காடாகிவிட்டது.  .
கடந்த ஆண்டுகளில் அருணாச்சல பிரதேசத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 13 விழுக்காடாகியுள்ளது. மணிப்பூரிலும் இதே போன்று பாரதீய மதங்களைப் பின்பற்றியவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காடாக இருந்தது. அதுவும் கூட தற்போது 50 விழுக்காடாகக் குறைந்துள்ளது. சுயநல நோக்கத்துடன் செயல்பட்டு வரும் பலவேறு குழுக்கள் இலக்கு நிர்ணயம் செய்து மதமாற்றம் செய்து வருவதே இதற்கு மிக முக்கியக் காரணமாகும்.நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இம்மாதிரியான மத மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. 
இம்மாதிரி மக்கள் தொகை விகிதாச்சாத்தில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைக் கண்டு ஆர்.எஸ்.எஸ். இன் அகில பாரத செயற்குழு மிகுந்த கவலை கொள்கிறது. எனவே கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.
1) நாட்டின் இயற்க்கை வளம், எதிர்காலத் தேவைகள் போன்றவற்றை கணக்கில் கொண்டு தற்போது மக்கள் தொகையில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகளையும் கணக்கில் கொண்டு புதிய மக்கள் தொகைக் கொள்கை ஒன்றினை உருவாக்கி அதை அனைவருக்கும் பொருந்திய படி செயல் படுத்திட வேண்டும்.   
2) நாட்டின் எல்லைப் பகுதி மாவட்டங்களில் சட்ட விரோத ஊடுருவல்களை முற்றிலுமாக தடுத்து நிருத்திடத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேட்டினை உருவாக்கி அதன் வாயிலாக ஊடுருவல் காரர்கள் குடியுரிமை பெறுவது, நமது நாட்டின் சொத்துக்களை வாங்குவது தடை செய்யப்பட வேண்டும்.
3) நாட்டுமக்கள் அனைவரும் மக்கள் தொகை விகிதாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி, நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடுகளைக்  காத்திட சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

Post a Comment

1 Comments

  1. உண்மை, இது அனைத்தும் நிறைவேற வேண்டும்

    ReplyDelete