ராம ஜென்மபூமி: சமரஸங்களின் சரிதம்


ராம ஜென்மபூமி விவாதத்தில் சந்தடி இல்லாமல் சமரஸம் காண்பதற்காக 2019 மார்ச் 8 அன்று உச்ச நீதிமன்றம் 3 நபர் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் இது முதல் சமரச முயற்சியுமல்ல, உச்சநீதிமன்றம் சமரசத்திற்கு குரல் கொடுத்த முதல் சம்பவமும் அல்ல. ராம ஜென்மபூமி வழக்கில் சுமுகத் தீர்வு காணும் கடைசி முயற்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா, ஆன்மீக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முன்னணி வழக்கறிஞர் ஸ்ரீ ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரைக் கொண்ட  மூவர் குழுவை மேதகு உச்ச நீதிமன்றம் நியமித்தது. இதுபோல சமரஸ முயற்சிகள் நடைபெற்ற விதம் பற்றியும் அவை தோற்றுப் போனதன் காரணங்கள் பற்றியும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இதோ காணலாம்: 1.சந்திர சேகரேந்திர சரஸ்வதி, மௌலானா அபுல் ஹஸன் அலி சமரஸ முயற்சி நவீன பாரதத்தில் ராமஜென்ம பூமி - பாபர் மசூதி விவாதத்தில் சுமுக தீர்வு காணும் முதல் முயற்சியாக அறியப்படுவது இந்த குழுவின் முயற்சி. 1986 ல் காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய தலைவராக இருந்த மௌலானா அப்துல் ஹாசன் அலியுடன் பேசி சுமூக தீர்வு காணும் முயற்சி தொடங்கினார். முதல் கட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து,  பல்வேறு குழுக்களிடமிருந்து நிர்பந்தம் வருவதாக குறிப்பிட்ட சங்கராச்சாரியார் அந்த முயற்சியில் இருந்து விலகினார். தனக்கு  வந்த நிர்பந்தங்களையும் மிரட்டல்களையும் பற்றி அவர் விவரம் எதுவும் சொல்லவில்லை  ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது உள்துறை அமைச்சர் பூட்டா சிங் ஹிந்து, முஸ்லீம் பிரதிநிதிகளுக்கு  இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வது உண்டு. அத்தகைய ஒரு சந்திப்பின்போது வணக்கத்துக்குரிய சன்யாசிகளை நோக்கி முஸ்லிம் பிரதிநிதிகள், ’அயோத்தி, காசி, மதுரா மூன்றையும் உங்களிடம் நாங்கள் ஒப்படைத்த பிறகு நாலாவதாக எதையும் கேட்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?’ என்று கேட்டார்கள். துறவிகள் அதற்கு பதில் சொல்லத் தொடங்குவதற்கு முன்பு குறுக்கிட்ட சையது ஷஹபுத்தீன் தனது பிரதிநிதிகளை நோக்கி, ’நீங்கள் யார் இப்படி எல்லாம் தாராளமாக அள்ளி வீசுவதற்கு? யார் உங்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தார்கள்?’ என்று கேட்டு சீறினார். 1990ல் வி.பி.சிங் அமைத்த மூவர் குழு ----------------------------------- 1989ல் வி.பி.சிங் பிரதம மந்திரியானபோது,அயோத்தி வழக்கு நீதிமன்றத்தில் இருந்த போதே மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சமரசக் குழுவை அமைத்தார்.ஆனால் இந்தக் குழு ஆரம்பத்திலேயே செயலற்றுப் போனது. ஏனெனில் 1986ல் ஆரம்பிக்கப்பட்ட, பாபர் மசூதி விஷயத்தில் முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட பாபர் மசூதி நடவடிக்கை குழு பங்கேற்க மறுத்தது. வி.பி.சிங் பிரதமராயிருக்கும் போது,ஒரு வெள்ளிக்கிழமையன்று மத மற்றும் சமூகத் தலைவர்கள், காலஞ்சென்ற அலிமியா நத்வி(லக்னௌ) மற்றும் பூஜ்ய சாதுக்களின் தலைமையில் ஆந்திரா பவனில் சந்தித்தனர்.அன்று மதியம் முஸ்லிம்கள் தொழுகைக்கு சென்றுவிட்டனர்.அவர்கள் தொழுகை முடிந்து திரும்பி வந்த போது பூஜ்ய ஸ்வாமி ஸத்யமித்ரானந்த் மகராஜ் தனது மேலாடையை விரித்து முஸ்லீம்களிடம் கூறினார்,"தொழுகை முடிந்ததும் ஏதாவது காணிக்கை செலுத்துவது முஸ்லீம்களின் கடமை. ஸ்ரீராம் ஜன்ம பூமியை நான் உங்களிடம் யாசிக்கிறேன்"என்றார்.அதற்கு முஸ்லீம்கள் இனிப்பை எடுத்து பரிமாறிக் கொள்வதைப் போலல்ல இந்த விஷயம் என்றனர்.செய்யது ஷகாபுதீன் சொன்னார்," ஒரு ஹிந்து ஆலயத்தை இடித்துத் தள்ளி விட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டால் முஸ்லீம்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறி விடுவார்கள், "என்று கூறினார்.இதற்குப் பதிலாக காசி விஸ்வநாதர் ஆலயத்தைச் பற்றி சொன்னபோது அவர் தனது வார்த்தையிலிருந்து பின்வாங்கி விட்டார். 3. சந்திர சேகரின் பத்து உறுப்பினர் குழு: வி.பி.சிங்கின் அரசியல் வாரிசான சந்திர சேகர் தனது முயற்சிகளைத் தொடர்ந்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் சுபோத் காந்த் சஹாயுடன் இணைத்து அதன் பத்து நபர் குழுவை அமைத்தார். இதில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி), விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) உறுப்பினர்கள், உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ், ராஜஸ்தான் முதலமைச்சர் பைரோன் சிங் சேகாவத் மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் ஷரத் பவார் ஆகிய மூன்று முதலமைச்சர்களையும் அவர் சேர்த்துக் கொண்டார். இந்த குழுவில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை நிபுணர்களும் இருந்தனர். இதற்காக மிக தீவிரமாகவும் நேர்மையாகவும் பூட்டாசிங் அவர்கள் மத்தியஸ்தத்திற்கு முயற்சித்தார். அவரது முயற்சியினால் வி.எச்.பி மற்றும் பாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் முன்னிலையில் பேச்சுவார்த்தைகளை தொடங்கினர். ஸ்ரீராம ஜன்மபூமி மீது ஒரு கோயிலை இடிப்பதன் மூலம் சர்ச்சைக்குரிய கட்டமைப்பு கட்டப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதன் மீதான உரிமையை கைவிடுவார்கள் என்பது பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் முக்கிய கருப்பொருளாக இருந்தது. இதன்படி 1990 டிசம்பர் 04 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இரு கட்சிகளும் அந்தந்த ஆதாரங்களை 1990 டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் உள்துறை அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் தங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே டிசம்பர் 25, 1990 க்குள் தகவல்களை பரிமாறிக்கொள்வார்கள் மேலும் இரு தரப்பும் 1991 ஜனவரி 06 ஆம் தேதிக்குள் அந்த ஆதாரங்களை மறுஆய்வு செய்து தங்கள் கருத்துக்களை உள்துறை அமைச்சருக்கு சமர்ப்பிப்பர், பின்னர் 09 ஜனவரி 1991 தேதிக்குள் அவர்கள் இந்த கருத்துகளின் அடிப்படையில் உடன்பாடு மற்றும் கருத்து வேறுபாடுகளைத் தயாரித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைப்பார்கள் என நிகழ்சி நிரல் அமைக்கப்பட்டது அதன்படி அவர்கள் மீண்டும் 10 ஜனவரி 1991 அன்று அவர்கள் சந்தித்து குஜராத் பவனில் கலந்துரையாடினர். வரலாற்று, தொல்பொருள், வருவாய் மற்றும் சட்டம் போன்ற துறைகலை சார்ந்த நான்கு வகையான வல்லுநர்கள் கிடைக்கக்கூடிய ஆதாரங்களை பகுப்பாய்வு செய்து அதன் பட்டியலை 17 ஜனவரி 1991 க்குள் அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது இதன் தொடர்சியாக நிபுணர்களின் கூட்டம் 24 ஜனவரி 1991 அன்று நடைபெறும் என்றும் நிபுணர்களின் முடிவுகள் இருதரப்பினருக்கு முன் பரிசீலிக்கப்படும், ஸ்ரீராமரின் வரலாற்றுத்தன்மை மற்றும் அயோத்தியின் அடையாளம் குறித்த கேள்வியை முஸ்லிம்கள் அதன் பிறகு எழுப்ப மாட்டார்கள், இந்த தலைப்புகளில் வேறு எந்த விவாதங்களும் இருக்காது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆதாரங்களை ஆய்வு செய்ய வல்லுநர்கள் இரண்டு குழுக்களாக 1991 ஜனவரி 24 அன்று சந்தித்தனர். வரலாறு மற்றும் தொல்பொருள் வல்லுநர்கள் முஸ்லிம் தரப்பிலிருந்து வந்திருந்தனர். உண்மைகளை ஆய்வு செய்ய 6 வார கால அவகாசம் வழங்குவதற்கான கோரிக்கையை அவர்கள் எழுத்து பூர்வமாக கேட்டனர். அதேசமயம் 1991 பிப்ரவரி 05 க்கு முன்னர் பணிகள் முடிக்கப்படலாம் என்று இந்து தரப்பு வல்லுநர்கள் கூறினர். முஸ்லிம் தரப்பில் இருந்து வருவாய் மற்றும் சட்ட வல்லுநர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஜனவரி 25, 199 அன்று மீண்டும் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்து தரப்பு வல்லுநர்கள் காலையில் 11.00 மணிக்கு குஜராத் பவனை அடைந்தனர். முஸ்லீம் தரப்பைச் சேர்ந்த வல்லுநர்கள் யாரும் 12.45 மணி வரை கூட்டத்திற்கு வரவில்லை, அதற்கு அவர்கள் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இதனால் முஸ்லிம் தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் விலகுவது அவமதிப்பாக கருதப்பட்டது. முஸ்லீம் தரப்பினர் இல்லாததால் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு தொடராமல் அங்கேயே முடிவடைந்தன. ஒவ்வொரு பேச்சின் போதும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பது முஸ்லிம்களின் தரப்புடன் நடந்த ஒரு அனுபவம். திரு சந்திரசேகர் அவர்களின் அரசாங்கத்தை காங்கிரஸார் கலைத்ததால் இந்த முயற்சி பயனற்றதாக போனது. 1992ல் விஷ்வ ஹிந்து பரிஷத் கரசேவைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தனது ஆன்மீக குரு சந்திரா சாமியை ராம ஜென்மபூமி சர்ச்சைக்கு மத்தியஸ்தராக அனுப்பினார். ஆனால் அவர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை துவங்கும் முன்னே கரசேவை துவங்கிவிட்டது. சர்ச்சைக்குரிய மசூதி கட்டிடம் டிசம்பர் 6, 1992ல் இடிக்கப்பட்டது. இஸ்மாயில் பரூக்கி தீர்ப்பு - அக்டோபர் 24 1994 இஸ்மாயில் பரூக்கி வழங்கிய தீர்ப்பில்: " அனைத்துத் தரப்பு பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்படுவதில் விருப்பம் தெரிவித்தது. இதன்மூலம் ஒரு வெற்றியாளரோ ஒரு தோல்வியாளரோ இருக்க முடியாது ஆகவே இது ஒரு நல்ல தீர்வாக அமையும். மாறாக நீதிமன்றம் தான் தீர்ப்பு தருவது எனில் அது யாராவது ஒருவருக்கு நஷ்டம் ஆகலாம். அது ஏற்படாதிருக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு ஒரு நீதிமன்ற உத்தரவை பெறுவது நல்லதாக முடியும். எல்லோரையும் மகிழ்விக்கும் ஒரு தீர்வு எட்டப்பட்டு அறிவிக்கப்படும் வரை இந்திய மக்களாகிய நமக்கு சுமுகமான ஒரு துவக்கம் அமையாது. " பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்ற இந்த அழைப்புக்கு எந்த தரப்பிலிருந்தும் ஆதரவான பதில் வரவில்லை. 5• அயோத்தியா பிரிவு: இந்தப் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப் பட பிரதமர் அலுவலகத்தில் "அயோத்தியா பிரிவு" ஒன்றை பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் துவங்கி வைத்தார். மூத்த ஐபிஎஸ் ஆபீஸர் குணால் கிஷோர், இந்து-முஸ்லிம் தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து. காரணம் இஸ்லாமிய தரப்பினர் அதே இடத்தில் மீண்டும் மசூதி எழுப்பப்பட வேண்டும் என ஆழமாக வற்புறுத்தினர், ஹிந்து தரப்பினர் சர்ச்சைக்குரிய நிலத்தை பிரம்மாண்டமான கோயில் கட்டுவதற்காக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆழமாக வலியுறுத்தினர். அயோத்தியில் வேறு முக்கிய இடத்தில் மசூதி கட்டிக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை முஸ்லிம் தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை. 6. சுவாமி ஜெயேந்திர சரஸ்வதி: 2002-03 ஆம் ஆண்டில், காஞ்சி பீடம் சுவாமி ஜெயேந்திர சரஸ்வதியின் சங்கராச்சாரியார் AIMPLB மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகளுடன் மத்தியஸ்தம் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சிகள் சர்ச்சைக்குரிய நிலம் கடவுள் ராமின் பிறப்பிடமாக இருப்பதால், முஸ்லிம்கள் வேறு ஏதாவது இடத்தில் மசூதியை கட்டக்கொள்ளலாம் என்ற வரியின் அடிப்படையில் அமைந்தன. இருப்பினும், முஸ்லிம் குழுக்கள் இந்த வாய்ப்பை நிராகரித்தன. குர்ஆனின் படி ஒரு முஸ்லீம் ஒரு மசூதியின் இடத்தை தானாக முன்வந்து விட்டுக்கொடுக்க கூடாது என்று பி.எம்.ஏ.சி வலியுறுத்தி வருகிறது. எவ்வாறாயினும், நீதிமன்றத்தால் அல்லது பாராளுமன்றத்தின் சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டால் அவர்கள் நிலத்திற்கான கோரிக்கைகளை வாபஸ் பெறுவார். ஶ்ரீ.ஶ்ரீ.அவர்கள், AIMPLB க்கு, தனது மார்ச், 6, 2018 கடிதத்தில் சர்ச்சைக்குரிய இடத்திலுள்ள சற்றேறக்குறைய ஒரு ஏக்கர் நிலத்தை நல்லெண்ண அடிப்படையில் ஹிந்துக்களுக்கு விட்டுக்கொடுக்கும்படியும்,அதற்கு பதிலாக ஹிந்துக்கள் அதனருகிலேயே 5 ஏக்கர் நிலத்தை சிறந்த மசூதி கட்டிக்கொள்ள கொடுப்பார்கள் எனவும் கூறியிருந்தார். முஸ்லிம்களுக்கு மெக்கா, மதீனா போல, ஹிந்துக்களுக்கு அயோத்தி முக்கியத்துவம் வாய்ந்தது என ஹிந்து அமைப்புகள் கூறிவந்தன. வழக்கில் தொடர்புடைய மூன்று அமைப்புகளில், நிரோஹி அகடா இந்த தீர்வை வரவேற்றது. ஹிந்து மஹாசபா மற்றும் ராம்லிலா விரஜ்மான் ஆகிய மீதி இரு அமைப்புகளும், ராமர் பிறந்தபூமி விஷயத்தில் சமரசத்திற்கு இடமில்லை என கூறிவிட்டன. 8.J.S.கேஹர் தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்:− B.J.P எம்.பி ஸ்ரீ சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அவர்கள் அயோத்தி வழக்கை விரைந்து விசாரித்து விடுமாறு ஏப்ரல் 4, 2017 இல் ஒரு மத்தியஸ்தர் குழுவை அமைக்கவும் அதில் தானே ஒரு மத்தியஸ்தராக இருக்கவும் முன்வந்தார். "இரு தரப்பிலும் தேர்ந்தெடுக்கப்படும் மத்தியஸ்தர்கள் குழுவிடம் நான் உட்கார்ந்த சமரசம் செய்ய தயார் எனவும் கூறினார்".ஒரு தீர்வு ஏற்படுத்த கோர்ட்டே ஒரு தலைமை மத்தியஸ்தர் நியமிக்கவும் விரைந்து தீர்வு காணவும் யோசனை வைத்தார். ஆனால் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள யாரும் முன்வரவில்லை. மார்ச் 31, 2017இல் அடுத்தகட்ட விசாரணையின் போது, இந்த வழக்கில் சமரச முயற்சிகள் எடுக்கப்பட்ட பலவித முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்ததால் நீதிமன்றமே தீர்வு காண வேண்டும் என்றும் இதில் அனைவரின் வாதமும் முடிவடைந்ததால் இறுதி தீர்ப்பை வெளியிட வேண்டும் என்றும் வாதத்தை முன்வைத்தார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள்: சமரச தீர்வுக்காக ஒரு முயற்சியை நவம்பர் 15, 2017 அன்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஶ்ரீ. யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்த பிறகு ஆரம்பித்தார் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று அமைப்புகளான ராம ஜென்மபூமி நியாஸ் ஸ்ரீ மகந்த். நிருத்திய கோபால் தாஸ், பாபர் மசூதி வழக்கில் தொடர்புடைய இக்பால் அன்சாரி, அதே வழக்கில் வழக்கு தொடர்ந்த ஹாஜி மெஹபூப் ஆகியோரிடம் ஒரு சந்திப்பின் மூலம் பேச முயன்றார். ஶ்ரீ. கோபால் தாஸ் அவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு பிரம்மாண்டமான ராமர் கோவில் அமைப்பதில் உறுதியாக இருந்தார்.ஹாஜி மகபூப் அவர்கள் அந்த இடத்தில் ஒரு மசூதி கட்ட வேண்டும் எனவும் கோவிலை வேறு இடத்தில் கட்டிக்கொள்ளவும் கூறினார். இக்பால் அன்சாரி அவர்கள் இந்த பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியாது என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு இறுதியானது எனவும் கூறியிருந்தார். ஸ்ரீ ஸ்ரீ.ரவிசங்கர் அவர்கள் பிரபலமான முஸ்லிம்கள் மதகுருவான மௌலானா அவர்களை சந்தித்தபோது மௌலானா பரூக்கி அவர்களை சந்தித்தபோது, இந்த விஷயத்தை AIMPLB மூலம் பேச முன் வருவதாக கூறியிருந்தார். ஹிந்து அமைப்புகள் அயோத்தியில் ராம ஜென்ம பூமி என்பது முஸ்லிம்களுக்கு மக்கா மதீனா போன்ற முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறிவந்தனர். மார்ச் 8, 2018 அன்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் AIMPLBக்கு எழுதிய கடிதத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ஒரு ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலத்தை ஹிந்துக்களுக்கு அன்பளிப்பாக அளிக்கும்படியும்,அதற்கு பதில் 5 ஏக்கர் நிலத்தை ஏற்று அதில் மசூதி கட்டிக் கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார்.இது இரு தரப்பிற்கும் வெற்றி ஏற்படும் படியாக இருக்கும் என்றும், நாட்டில் உள்ள 100 கோடி இந்துக்களின் நல்லெண்ணத்தை பெற உதவும் என்றும் கூறியிருந்தார் இத்துடன் இந்த பிரச்சனை முடிவடையும் என்றும் கூறியிருந்தார். இதில் ஒரு "பாலக் நாமா"அமைத்து, இந்த கோவில் இந்து முஸ்லிம் ஒத்துழைப்பால் கட்டப்பட்டது என அமைக்கவும் உறுதி கூறியிருந்தார். இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு நன்கொடை எனக் கருதாமல், பாரத மக்களுக்கு நன்கொடை எனக் கருதவும் வேண்டினார். சில முஸ்லிம் அமைப்புகள் இந்த தீர்ப்பை ஏற்று சரயு நதியை ஒட்டிய பகுதிகளிளோ,அல்லது,லக்னோவிலோ, கட்டிக் கொள்ள முன்வந்தனர். ஆனால் நவம்பர் 16 2017 அன்று AIMPLB,இந்த தீர்ப்பை நிராகரித்தது. இந்த வழக்கை, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து அதன் தீர்ப்பை தீர்க்க ஏற்கவும் முடிவு செய்தனர். மத்தியஸ்தத்தின் மத்தியஸ்த குழு: நீதி (ஓய்வு) ஃபக்கீர் முகமது இப்ராஹிம் கலிஃபுல்லா, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் முன்னணி நீதிபதி ஸ்ரீராம் பஞ்சு. குழு அறிக்கையை சமர்ப்பிக்க நான்கு வார கால அவகாசமும், இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எட்டு வாரங்களும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியஸ்த செயல்முறை அல்லது செய்தி ஊடகம் எதுவும் இருக்காது, மேலும் மூடிய கதவுகளுக்கு பின்னால் அல்லது கேமரா நடவடிக்கைகளில் மத்தியஸ்தம் நடத்தப்படும். நீதிமன்றத்தில், முஸ்லீம் வழக்குரைஞர் பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழு, மத்தியஸ்தத்திற்கு முன் நிபந்தனை இருக்காது என்ற நிபந்தனையுடன் மத்தியஸ்தத்தை ஆதரித்துள்ளது. இந்துக்களிடமிருந்து வந்த மூன்று வழக்குரைஞர்களில் - நிர்மோஹி அகாடா மத்தியஸ்தத்தை வரவேற்றுள்ளார்; இந்து மகாசபா மற்றும் ராம்லாலா விராஜமான் ஆகிய இருவருமே சர்ச்சைக்குரிய இடம் ராம் கடவுளின் பிறப்பிடமாக இருப்பதால், இந்த பிரச்சினையில் எந்த மறுப்பும் இருக்க முடியாது என்று வாதிட்டனர். மத்தியஸ்தக் குழுவின் முதல் கூட்டம் அயோத்தியில் மார்ச் 13, 2019 அன்று நடந்தது. ஆரம்பத்தில், முஸ்லீம் வழக்குரைஞர் இக்பால் அன்சாரி எஸ்சி நியமித்த மத்தியஸ்தத்தை எதிர்த்தார், ஆனால் பின்னர் அவர் அதை வரவேற்றார்.

Post a Comment

0 Comments